மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

தேனியில் பூட்டிய வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட செவிலியர் - கொலை குறித்து வெளியான புதிய தகவல்கள்

’’செல்வியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர்கள் மற்றும் செல்வி பேசிய நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். அதனை அடிப்படையாக கொண்டு போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது’’

திண்டுக்கல் பாரதிபுரம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவர், திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள ஓட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (46).  இவர், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இதனையடுத்து அவர், ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் செல்வி வசித்து வந்தார். சுரேஷ்-செல்வி தம்பதிக்கு ஹரிகரன் என்ற மகனும், கமலி என்ற மகளும் உள்ளனர். ஹரிகரன், நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். கமலி, திண்டுக்கல்லில் தனது தந்தையுடன் தங்கியிருந்து அங்குள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.


தேனியில் பூட்டிய வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட செவிலியர் - கொலை குறித்து வெளியான புதிய தகவல்கள்

ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த சில ஆண்டுகளாக செல்வி மட்டும் தனியாக வசித்து வந்தார். அங்கிருந்தபடியே ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவர் பணிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ், செல்வியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் செல்போனை எடுக்கவில்லை.


தேனியில் பூட்டிய வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட செவிலியர் - கொலை குறித்து வெளியான புதிய தகவல்கள்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆண்டிப்பட்டியில் வசிக்கிற தனது உறவினர்களிடம் தொடர்பு கொண்டு செல்வியை வீட்டில் போய் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில் அவருடைய உறவினர்கள், செல்வி வசித்த வீட்டுக்கு சென்றனர்.  அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டுக்குள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மின்விசிறி ஓடி கொண்டிருந்தது. ஆனால் செல்வியின் பெயரை சொல்லி பலமுறை அழைத்தும் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து உறவினர்கள் உள்ளே சென்றனர். அங்கு பூஜை அறையில், ரத்த வெள்ளத்தில் செல்வி பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மர்ம நபர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.


தேனியில் பூட்டிய வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட செவிலியர் - கொலை குறித்து வெளியான புதிய தகவல்கள்

இதுகுறித்து ஆண்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, ஆண்டிப்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்ககிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வெற்றி வரவழைக்கப்பட்டது. அது, வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி 200 மீட்டர் தூரத்துக்கு ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, செல்விக்கு நன்றாக தெரிந்த நபரே இந்த கொலையை செய்திருக்கக்கூடும் என்று போலீசார் கருதுகின்றனர். 2 பேரும் பேசி கொண்டிருந்தபோது திடீரென கொலையாளி அவரை தாக்கி இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். பூஜை அறை, படுக்கை அறையில் பொருட்கள் சிதறி கிடந்ததால் கொலை செய்யப்படுவதற்கு முன்பு செல்வி அந்த நபருடன் போராடி இருக்கிறார். வீட்டில் இருந்த பீரோவில் துணிகள் சிதறி கிடந்தன. ஆனால் அதில் இருந்த தங்க சங்கிலி அப்படியே இருந்தது. இதேபோல் செல்வி அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு ஆகியவற்றை மர்ம நபர் கழற்றி செல்லவில்லை. இதனால் நகை, பணத்துக்காக இந்த கொலை நடைபெறவில்லை என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். 


தேனியில் பூட்டிய வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட செவிலியர் - கொலை குறித்து வெளியான புதிய தகவல்கள்

அதேநேரத்தில் இந்த கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட செல்வியின் செல்போன் மாயமாகி விட்டது. அந்த செல்போனை கொலையாளியே எடுத்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது, அந்த செல்போன் ‘சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் துப்புத்துலக்க செல்போனை துருப்புச்சீட்டாக போலீசார் பயன்படுத்துகின்றனர். செல்வியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர்கள் மற்றும் செல்வி பேசிய நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். அதனை அடிப்படையாக கொண்டு போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.   இதேபோல் செல்வி வசித்த குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து, அதன் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.  செல்வி குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு 3 மாடிகளை கொண்டது. அங்கு மொத்தம் 9 வீடுகள் உள்ளன. அங்கு வசிப்போரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்திலே வெளுத்து வாங்கிய பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்திலே வெளுத்து வாங்கிய பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
Breaking News LIVE: மக்களவை தேர்தல் 2024 : பதிவான வாக்குகள் - ஒட்டுமொத்த சதவிகிதம் : 65.79%
Breaking News LIVE: மக்களவை தேர்தல் 2024 : பதிவான வாக்குகள் - ஒட்டுமொத்த சதவிகிதம் : 65.79%
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Rahul gandhi :  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்? I.N.D.I.A போடும் ப்ளான்! கூட்டத்தில் பேசியது என்ன?Cuddalore Drunkard : அடடா மழைடா..அடைமழைடா! கொட்டும் மழையில் குளியல்மதுபிரியர்கள் ATROCITYNaveen Patnaik vs Modi : மோடி பக்கா ஸ்கெட்ச்..நவீனுக்கு முற்றுப்புள்ளி!உதவிய VK பாண்டியன்?BJP Cadre Tonsure : ’’அண்ணாமலை தோத்தா மொட்டை!’’ சபதத்தை நிறைவேற்றிய பாஜககாரர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்திலே வெளுத்து வாங்கிய பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்திலே வெளுத்து வாங்கிய பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
Breaking News LIVE: மக்களவை தேர்தல் 2024 : பதிவான வாக்குகள் - ஒட்டுமொத்த சதவிகிதம் : 65.79%
Breaking News LIVE: மக்களவை தேர்தல் 2024 : பதிவான வாக்குகள் - ஒட்டுமொத்த சதவிகிதம் : 65.79%
BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
Salem Leopard: சேலத்தில் சிக்காத சிறுத்தை - வழி மாறி சென்றதா ?
சேலத்தில் சிக்காத சிறுத்தை - வழி மாறி சென்றதா ?
”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!
”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!
Election King Padmarajan: நேற்று முன்தினம் தேர்தலில் 240வது தோல்வி - இன்று 241வதாக மீண்டும் வேட்புமனு தாக்கல் - தேர்தல் மன்னனின் விடாமுயற்சி
நேற்று முன்தினம் தேர்தலில் 240வது தோல்வி - இன்று 241வதாக மீண்டும் வேட்புமனு தாக்கல் - தேர்தல் மன்னனின் விடாமுயற்சி
Embed widget